கொரோனாவால் உயிரிழந்தவர்கள் அனைவரும் வேறு பல ஆபத்தான நோய்களாலும் பதிக்கப்பட்டிருந்தனர் – தொற்று நோயியல் நிபுணர் அறிவிப்பு!

Thursday, October 29th, 2020

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களில் உயிரிழந்தவர்கள் வேறு ஆபத்தான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ், ஆபத்தான நோய்கள் உள்ள சிரேஸ்ட பிரஜைகளுக்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக சிரேஸ்ட பிரஜைகள் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம் எனவும் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுடன், உடல்நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவர்களை நாடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இலகுவாக வெற்றிபெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

000

Related posts: