கைத்தொலைபேசிகளை அவதானிக்க சிறைச்சாலையில் விசேட நடவடிக்கை!

Tuesday, July 24th, 2018

சட்டவிரோதமான முறையில் சிறைக்கைதிகள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பாக கண்டறிவதற்கு சி.சி.டி.வி.கமெராக்களை பொருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளார்.
சிறையில் தடுப்பு காவலிலுள்ள கைதிகள், கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி பல தவறான வர்த்தகங்களை முன்னெடுப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றமையினால், இது தொடர்பான உண்மையை கண்டறியும் பொருட்டு இந்த சி.சி.டி.வி.கமெராக்களை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: