கூட்டமைப்பின் ஆட்சியில் யாழ் பஸ் நிலைய கழிவறைகள் நாற்றமெடுக்கின்றது -தயாசிறி தெரிவிப்பு!

Monday, March 25th, 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறு சீரமைப்பு திட்டத்தின் பிரகாரம் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர யாழப்;பாண பஸ்; தரிப்பு நிலையத்திலுள்ள கழிவறைகளக்கூட பராமரிக்க தெரியாத கையாலாகதவர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பலர் யாழ்பாணத்தில் இல்லை என்றும் அவர்கள் இங்கிருந்தால் மக்களின் தேவைகள் விளங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர் –

கடந்த 30 வருடங்கள் கொடிய போரால் வடக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தப் போரின் அனுபவங்கள் உங்கள் எல்லோருக்கும் உள்ளன. நாங்கள் அமைதியாக இரவில் நித்திரை கொள்ளும்போது நீங்கள் பயத்துடன் நித்திரை கொண்டீர்கள். உறவுகளை இழந்தும் தொலைத்தும் இருக்கின்றீர்கள். இந்தத் துர்ப்பாக்கிய நிலைக்கு மன்னிப்புக் கோருகின்றேன் என்றும் கூறியுள்ளார்.

Related posts: