குழப்பநிலைகளுக்கு மத்தியில் வரும் 5 ஆம் திகதி கூடுகின்றது நாடாளுமன்றம்!

Thursday, November 1st, 2018

எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிக்கும் சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இவ்விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய 16 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றை கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

Related posts: