குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்றுமுதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானம்!
Monday, March 11th, 2024
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துாவ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை, குறிப்பாக சாலை மறியல் சோதனைகளுக்கு போதுமான அதிகாரிகள் இல்லாமை, கடுமையான குற்றவாளிகளை கைது செய்யும் பணியை இலகுவாக்கும் காரணங்களுக்காக இராணுவத்தினர் அழைக்கபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மின்வலுவை சிக்கனமாக பாவிக்கவும் - மக்களிடம் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா கோரிக்கை!
மின்சார கட்டணம் தொடர்பில் இலங்கைக்கு யோசனை!
இந்தியாவிலிருந்து மேலும் 40 தொன் ஒக்சிஜன் நாட்டை வந்தடைந்தது!
|
|
|


