குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Monday, April 12th, 2021

கொரோனா வைரசு தொற்றின் தாக்கத்திற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கொடுப்பனவு இன்றுமுதல் வழங்கப்படுவதுடன் 7 பிரிவுகளின் கீழ் பயனாளிகள் தெரிவு செய்யபபட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறும் குடும்பங்கள், விசேட தேவையுடையோரை கொண்ட குடும்பங்கள், சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவை பெறும் நபர்கள் உள்ள குடும்பங்களுக்கே  இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் சுமார் 40 இலட்சம் குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர் என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்து

அதேநேரம் குறைந்த வருமானம் பெறுவோருக்கும், சமுர்த்தி உதவி பெறுவோருக்கும் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு இன்று சமுர்த்தி வங்கிகளின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: