குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Thursday, March 23rd, 2023குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்குவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளும் அதற்கான வழியை சுட்டிக்காட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமல்ல, முழு நாட்டிற்கும் கதவு திறக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாணவர்களுக்கு தினமும் 100 ரூபா! -கல்வி அமைச்சு!
முல்லை மக்களே டக்ளஸ் தேவானந்தா மீது நம்பிக்கை வையுங்கள்: உங்கள் எதிர்காலம் ஒளிமயமாகும்- ஈ.பி.டி.பியி...
ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் கௌரவ பிரதமரினால் நியமி...
|
|