குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்யவதற்கு அமைச்சரவை அனுமதி!

Saturday, December 3rd, 2022

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விமானங்களின் காலம் நிறைவடைகின்றமையினால் அமைச்சரவை அனுமதியுடன் புதிதாக குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அடுத்த மூன்று மாதங்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பான சேவையை வழங்கவுள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஈ.பி.டி.பி துரித நடவடிக்கை - நயினாதீவின் உள்ளக பேருந்துப் போக்குவரத்து வேவை வழமைக்கு திரும்பியது!
மாணவர்களை பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்க முடியாது - பாடசாலையும் அத்தியாவசிய சேவையாக்கப்படும் என...
அஸ்வெசும நலன்புரி திட்டம் - பயனாளிகளுக்கு இதுவரை 5 ஆயிரத்து 196 கோடி 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ள...