குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெறும் – அரசாங்க அதிபர்

Sunday, July 23rd, 2017

கிளிநொச்சியின் குடிநீர் விநியோகம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியின் மூலம் தடையின்றி இடம்பெறும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலக மண்டபத்தில், இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் நிதி கிடைக்கப் பெற்றிருக்கின்றது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.இதன் முதற்கட்டமாகவே குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நீர்த்தாங்கிகளும், பவுஸர்களும் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான சாரதிகளை நியமிப்பதற்கும் எமக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கான நிவாரணம் வழங்குவது தொடர்பில் அதிகாரிகளிடம் அவர்களின் விபரங்களைக் கேட்டிருக்கின்றோம். உரிய காலத்தில் அவற்றுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மேலும் தெரிவித்தார்.

Related posts: