குடாநாட்டில் 23 நாட்களில் 291 பேருக்கு டெங்கு தொற்று!

Wednesday, January 25th, 2017

வருடத்தின் ஆரம்பத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை  வரை 291 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மாவட்டத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டில் 1,272 பேர், டெங்கினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளதுடன் 3 பேர், டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துன்ன யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், இதற்குப் போதியளவு ஒத்துழைப்புக் கிடைப்பதில்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.

04-1446609960-dengu567

Related posts: