குடாநாட்டில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு!

Saturday, July 30th, 2016

 

குடாநாட்டில் கடந்த 3 மாதங்களாக இல்லாத அளவு டெங்குத் தொற்று இந்த மாதம் ஏற்பட்டுள்ளதுடன் இதுவரை 159 பேர் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வருட ஆரம்பத்தில் அதிக தொகையில் காணப்பட்ட டெங்குத் தொற்று ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 100 இற்கும் குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதத்தின் கடந்த வாரம் வரையில் 159 பேர் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது நுளம்புப் பெருக்கமும் அதிகரித்துள்ளது. அதிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களைச் சுகாதாரப் பகுதியினர் கேட்டுக்கொள்கின்றனர். வடக்கில் இந்த மாதம் வவுனியாவில் 21 பேரும், முல்லைத்தீவில் 13 பேரும், கிளிநொச்சியில் 5 பேரும், மன்னாரில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் ஆயிரத்து 463 பேர் இந்த வருடம் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: