கீரிமலையில் அமைகிறது சுகாதார திடக்கழிவு நிலநிரப்பு மையம்!

Wednesday, September 7th, 2016

கீரிமலை பகுதியில் சுண்ணாம்புக்கல் அகழப்பட்டதால்  ஏற்பட்டிருக்கும் குழியைக்கொண்ட பிரதேசத்தில் சுகாதாரமான திடக்கழிவு நிலநிரப்புத்திட்டம் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று (06) யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கும்,பிரதேசசபை செயலாளர்களுக்கும் விளக்கம் அளிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கலந்துரையாடலில் கொழும்பில் இருந்து வருகைதந்திருந்த மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதிநிதிகள் விளக்கங்களை வழங்கியிருந்தனர்.

unnamed (3)

யாழ் குடாநாட்டில் அன்றாடம் மலைபோல் குவியும் திண்மக் கழிவுகளின் பிரச்சினைகளுக்குக் கீரிமலையில் அமையவுள்ள நிலநிரப்புத்திட்டம் ஒரு தீர்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசசபைகளின் ஊடாகச் சேகரிக்கும் திண்மக் கழிவுகளில் இருந்து உக்கக்கூடிய கழிவுகளும், மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்ரிக் கழிவுகளும் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் எஞ்சிய திடக்கழிவுகளே கீரிமலைக் குழியில் நிரப்பப்பட உள்ளது. தினமும் 50 தொன் கழிவுகள் என்ற அடிப்படையில் 15 வருடங்களில் இந் நிலநிரப்புத்திட்டம் முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் கழிவுகளினால் நிலத்தடிநீர் மாசடையாமல் இருப்பதற்காகக் கற்குழியின் அடிப்பகுதியில்செயற்கைத் தரைவிரிப்பு மற்றும் பென்ரோனைற் களியினால் மூன்று அடுக்குகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.

unnamed (2)

இத்திட்டத்துக்கு கொரிய அரசாங்கம் 34 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், இலங்கை அரசாங்கம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்க உள்ளது. 2018ஆம் ஆண்டின் இறுதியில் இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது .

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண  முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கே.எச்.முத்துக்குட ஆராச்சி  மற்றும் குடாநாட்டின் அரசியல்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சார்பில் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கலந்துகொண்டுடமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts: