கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு!
Thursday, April 28th, 2016தங்களுக்குரிய நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைக்குரிய திகதியை உடனடியாக அறிவிக்குமாறு கோரி கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர் சிலர் இன்றையதினம் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக ஆரம்பித்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு உறுதியான தீர்வுகள் கிடைக்கப்பெறாததன் காரணத்தால் சில தொண்டராசிரியர்கள் சாகும்வரை தாம் உண்ணாவிரத போராட்டத்தை தொடரவுள்ளதாக தெரிவித்து போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.
நியாயமான கோரிக்கையயை முன்வைத்து தொண்டராசிரியர்கள் மேற்கொள்ளும் இந்த போராட்டத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளதுடன் போராட்டத்திலீடுபட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களுடன் இணைந்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்துள்ளனர்.
ஏற்கனவே குறித்த தொண்டராசிரியர்களின் போராட்டம் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது திருகோணமலை மாவட்ட விசேட பிரதிநிதியான புஸ்பராசா தங்கராசா அவர்கள் மூலம் தொண்டராசிரியர்களின் போராட்டம் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக அறிந்து கொண்டதுடன் இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|