கிழக்கு மாகாணஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் – கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண ஆளுநரிடம் உறுதியளிப்பு!

Wednesday, May 31st, 2023

கிழக்கு மாகாணத்தில், 4 ஆயிரத்து 200 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்.

கல்வி அமைச்சில், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு நிரந்தர தீர்வினை காண்பதற்காக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த கல்வி அமைச்சர், முதற்கட்டமாக மூன்று மாத காலத்திற்குள், கல்வியியற் கல்லூரியில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களைக் கொண்டு பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்குவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் : மின் வடங்கள் அறுந்து விழுந்தால் உடனடியாக அறியத்தரவும்து - மின்சார...
பிணைமுறி ஒப்பந்தத்தில் ஈடுபட்ட அனைவரும் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்திச் செல்கின்றனர...
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்த...

புதிய வீதி ஒழுங்கு முறைமை நாளைமுதல் கடுமையாக நடைமுறைபடுத்தவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிப்பு!
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 7 பேர் பலி - நோயால் பீடிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையும் அதிகரிப்ப...
வடக்கு, கிழக்கில் சட்டவிரோத நிர்மாணங்கள் – நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மீ...