இலங்கையுடனான நேரடி விமான சேவைகளை ஆரம்பித்தது துருக்கி விமான சேவை நிறுவனம்!

Monday, October 30th, 2023

துருக்கி விமான சேவை நிறுவனம் இன்று முதல் இலங்கையுடனான நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது.

நேரடி விமான சேவையை ஆரம்பித்து வைக்கும் வகையில் துருக்கி விமான சேவையின் முதலாவது விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பித்து வைக்கும் வகையில் இஸ்தான்புல்லில் இருந்து துருக்கி விமான சேவையின் முதல் விமானம் இன்று அதிகாலை 5.40 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். பின்னர், காலை 7.40 அளவில் குறித்த விமானத்தில் இருந்து 209 பயணிகள் துருக்கியின் இஸ்தான்புல் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவை வாராந்தம் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் பயணத்தை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: