கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அரசியல் தலையீடுகள் இல்லை – முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்த விளையாட்டுத்துறை அமைச்சர்!
Saturday, October 28th, 2023
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நிராகரித்துள்ளதுடன், இதுதொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ஐ.சி.சி) விளக்கமளித்து கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையில் தாம் அரசியல் தலையீடு செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் அல்லது இலங்கை அரசாங்கத்தினால் இலங்கை கிரிக்கெட் சபையில் எந்தவித அரசியல் தலையீடும் செய்யப்படவில்லை என உறுதியளித்துள்ள விளையாட்டு அமைச்சர், இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கனவு நிறைவேறியிருந்தால் தலைவிதியையே மாற்றி எழுதியிருப்போம் - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந...
போதைப்பொருள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலா? – தென்னிலங்கை அரசியல் களத்தில் பரபரப்பு!
|
|
|


