காவல்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடிய ஒருவரே புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து!
Wednesday, June 28th, 2023காவல்துறையில் முன்னுதாரணமானவரும், களங்கமற்றவராகவும், இலங்கை காவல்துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடியவருமான ஒருவரே, அடுத்த பொலிஸ் மா அதிபராக இருக்க வேண்டும் என்பதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அந்த சங்கம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
நீதி நிர்வாகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை இன்றியமையாதது என்பதால், பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிறந்த ஒருவர் நியமிக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தேசிய வளங்களை விற்பது அரசின் நோக்கமல்ல - நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் ...
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷச இடையே விசேட கலந்துரையாடல்!
குறைந்தபட்ச வேதன சட்டத்தை திருத்தம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
|
|