கடல் எல்லைக்குள் அத்துமீறிய 29 இந்திய மீனவர்கள் கைது!
Sunday, March 6th, 2016இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 29 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் இன்று (06) அதிகாலை இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் வடக்கு கடற்பகுதியில் ஒரு ட்ரோலர் படகுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
அத்துடன் மேலும் 3 சிறுமீன்பிடி படகுகளுடன் தலைமன்னார் தென்பகுதியில் கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களை கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அமைச்சரவையில் மீன்பிடி அமைச்சிற்கு மேலதிக பொறுப்புக்கள்!
சுற்றுலா துறையில் 2024 ஆம் ஆண்டில் மிகவும் வளர்ச்சியடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் உள்ளடக்க...
செங்கடலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இலங்கையும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் – பா...
|
|