காவல்துறை உத்தியோகத்தர்களின் தவறான நடத்தைகள் தொடர்பில் 118 இலக்கத்தின் ஊடாக பொது மக்கள் முறைப்பாடுகளை அளிக்க முடியும் – பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்பு!

காவல்துறை உத்தியோகத்தர்களின் தவறான நடத்தைகள் தொடர்பில் 118 என்ற இலக்கத்தின் ஊடாக பொது மக்கள் முறைப்பாடுகளை அளிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் நிர்வகிக்கப்படுவதாக காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அளிப்பவரின் அடையாளத்தை அறிவிக்காமல் அந்த இலக்கத்தின் ஊடாக உரிய தகவல்களை வழங்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 118 என்ற குறித்த இலக்கத்தின் ஊடாக நாட்டில்; இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் எனவும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகவலாளர்களால் வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|