நாவற்குழி கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, April 24th, 2018

நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் சென்று கொண்டிருந்த இருவரும்  வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: