கால்நடை வைத்தியர்கள் போராட்டம்!
Tuesday, August 9th, 2016
அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வைத்தியர்கள் சுகயீன விடுமுறையில் கடமைக்கு செல்லாமல் இருப்பதாக அரச மிருக வைத்திய சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்திய எம்.பி.கீர்த்தி குமார தெரிவித்துள்ளார்.
தங்களின் சேவையில் உள்ள குளறுபடிகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பு நகரில் உள்ள இறைச்சிக் கடைகள் சோதனை இடப்பட மாட்டாது என அரச மிருக வைத்திய சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்திய எம்.பி.கீர்த்தி குமார குறிப்பிட்டார்.
Related posts:
வெளிநாட்டுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்காக 14 மில்லியன்!
ஹட்டன் நகரிலுள்ள 3 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசை வீடுகளை அகற்றி நிரந்தர வீடுகளை அமைக்க பிரதமர் நடவடி...
இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


