காற்றுடன் கூடிய மழை மேலும் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, July 16th, 2019

தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை இன்றிலிருந்து(16) 19ஆம் திகதி வரை (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வடமேல், மேல் மற்றும் தென் கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: