காரைநகரில் 4 சிறுவர்கள் இடங்கலாக 2 நாட்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று !

Wednesday, May 26th, 2021

யாழ்ப்பாணம் காரைநகரில் நேற்றயதினம் 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

காரைநகரில் நேற்று 10 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலும் 7 பேருக்கு தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை நேற்றயதினம் 10 வயது, 11வயது, 12 வயதுடைய 3 சிறுமிகளுக்கும், 14 வயதான ஒரு சிறுவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டது.

Related posts:

தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் அகற்றம் - யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவ...
அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் தவறான வழியில் பயன்படுத்துவதை நிறுத...
தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர் – நாட்டின் தற்...