காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!
Saturday, March 14th, 2020
கொரோனா அச்சம் காரணமாக காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் இதில் பலர் சில மணித்தியாலங்களில் சிகிச்சையளிக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் 30 பேர் வரை தற்போது வரை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வீட்டிலேயே தனிமையில் இருக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் தீவிரமானால் மாத்திரம் மருத்துவ சிகிச்சைகளை நாடுமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.
Related posts:
தற்கொலை தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
பதவி விலகுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
|
|
|


