காணமல்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நாளை நாடாளுமன்றில்!

காணாமல்போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அலுவலகத்தின் ஊடாக காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும்போது தேவை ஏற்படின் சர்வதேசத்திடம் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொள்ளமுடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த காணமல்போனோர் குறித்த அலுவலகத்திற்கு சாட்சி வழங்கும் பாதிக்கப்பட்டோரின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதற்காக தகவல்களை பெற்றுக்கொள்வதில் ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளார் மாநட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதி ஊடகத்துறை அமைச்சர் கருணாரத்ன பரணவிதான மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த சில மாதங்களுக்குள் யாழ்ப்பாணம் - சென்னை இடையேயான விமான சேவை ஆரம்பம் - அமைச்சர் பிரசன்ன ரனதுங்...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனைய பணிகள் இன்றுமுதல் மறுஅறிவித...
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தனிப்பட்ட அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் - அமைச்சர் ...
|
|