இலக்குத் தகடற்ற வாகனங்கள் ஏ 32 வீதியில் பயணிக்கின்றன – மக்கள் கவலை!

Tuesday, October 31st, 2017

 

தென்மராட்சி தெற்கில் இரவில் இலக்கத்தகடு இல்லாத வாகனங்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் செல்வது குறித்து தென்மராட்சி தெற்குப் பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

அவர்கள் திருட்டு, கொள்ளை முயற்சிக்காக அவ்வாறு செல்கிறார்களா அல்லது வாள்வெட்டுக் குழு போன்ற அடாவடிகளில் ஈடுபடுவதற்காகச் செல்கிறார்களா என்பது தெரியாமல் அச்சப்பட வேண்டியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தினமும் இரவு 10 மணிக்குப் பின்னர் நாவற்குழியிலிருந்து கேரதீவு வரையான ஏ 32 சாலையில் பெருமளவு வாகனங்கள் பயணிக்கின்றன. அவற்றில் சில வாகனங்கள் அதி வேகத்தில் இலக்கத்தகடு இல்லாமல் செல்கின்றன. அதனை பல தடவைகள் அவதானித்துள்ளோம்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடலாம். இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் இலக்கத்தகடற்ற வாகனங்கள் பயணிப்பதை அவதானித்துள்ளோம் என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் பொலிஸார் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது.

 

Related posts: