கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Saturday, September 23rd, 2023கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஹேமாகம – பிடிபன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னதாக நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த கல்விபொதுத் தராதர உயர்தரப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மண்ணெண்ணெய் விலை இன்று நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் !
வந்திகளை நம்பவேண்டாம் – பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
மின் பாவனை தொடர்பில் அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ப...
|
|