பயணச்சீட்டு வழங்காத பஸ்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

Monday, December 19th, 2016

பொதுப் போக்குவரத்தில் தனியார் பஸ்களில் பயணிகள் போக்குவரத்து செய்யும் போது பயணச்சீட்டு வழங்காத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமானது என்று அதிகாரசபையின் தலைவர் துசித ருவன் வணிகரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பயணச்சீட்டு பெற்றுக் கொள்வது அவர்களின் உரிமை என்றும், அவ்வாறு நடந்து கொள்ளத் தவரும் பஸ்கள் தொர்பில் அதிகார சபைக்கு அறியத் தருமாறு துசித ருவன் வணிகரத்ன மேலும் கூறியுள்ளார்.

bus

Related posts: