கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!
Tuesday, May 7th, 2019
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் பெற்றோரிடம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து பாதுகாப்பு பிரிவுகளும் அது தொடர்பில் தமக்கு விளக்கமளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னரே அவற்றை இரண்டாம் தவணைக்காக திறக்க தீர்மானிக்கப்பட்டது. எனினும் மாணவர்களின் வருகை நேற்றைய முதலாம் நாள் குறைவாக இருந்துள்ளது.
பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் விடுவது குறித்து தம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் உரிய காலத்துக்கு பாடசாலையை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அற்ப சிந்தனையாளர்கள் நாட்டை தீயிடுவதற்கு இடம் அளிக்ககூடாது - இராஜாங்க அமைச்சர் டிலான்!
தொடர்ந்தும் இரண்டாயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!
பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை – வெளியாகும் தகவலில் உண்மையில்லை எ...
|
|
|


