முதன்முதலில் 3 மேல்நீதிமன்ற நீதிபதிகளுடன் வித்தியா கொலை வழக்கு  விசாரணை!

Monday, July 11th, 2016

மாணவி வித்தியா சிவலோகநாதன் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளை அமைத்து விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த வருடம் நடைபெற்ற குறித்த சம்பவம்  குடாநாட்டில் பெரும் அதிர்ச்சிக்கும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை முடித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்ட ஆவணங்களை சட்டமா அதிபரிடம் கையளித்துள்ளனர்.

யாழ். மேல் நீதிமன்றத்தில் ஒரே ஒரு நீதிபதியே பணியாற்றுகின்ற நிலையில், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு ஒன்றை உருவாக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் வழக்கொன்று மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வினால் நடாத்தப்படுவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: