கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் வர்த்தமானி இன்று வெளியீடு!

Friday, January 25th, 2019

2016, 2017ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று(25) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குரிய விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இரு வருடங்களின் பெறுபேறுகளுக்கு அமைய தலா நான்காயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: