கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Tuesday, March 5th, 2024
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள மூன்று பாடங்களை உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் அறிவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் விருப்பத்திற்கேற்ப திறமைகளை வெளிப்படுத்தும் பாடப் பிரிவுகளில் தொழில்சார் பயிற்சிகளைப் பெறுவதற்குத் தேவையான பின்னணி தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இவ்வாண்டில் பொலிஸாருக்கு எதிராக 1,474 முறைப்பாடுகள் பதிவு!
இலங்கை - இந்தியா இடையில் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளமையை உணர்ந்து வியக்கின்றே...
நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


