சைட்டம் விவகாரம்: ஜனாதிபதி குழுவுடனான பேச்சுவார்த்தையைப் புறக்கணிக்கிறது மருத்துவ சபை!

Saturday, September 23rd, 2017

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தலைமையிலான குழுவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை புறக்கணிப்பதாக இலங்கை மருத்துவ சபை தீர்மானித்துள்ளது.

கடந்த 6ஆம் திகதி குறித்த குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதுஇ இலங்கை மருத்துவ சபை ஏற்றுக் கொள்ளாத விடயங்களைக் குறித்த குழுவின் அறிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தமையாலேயே நேற்று(22) நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையை மருத்துவ சபை புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பில் மருத்துவ சபை கூடி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வரை குறித்த குழுவுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என மருத்துவ சபையின் முகாமைத்துவ குழு தீர்மானித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சட்ட மா அதிபர் திணைக்களம்இ உயர்கல்வி அமைச்சுஇ சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: