கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு – அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிப்பு!

Sunday, April 28th, 2024

கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் கொடுப்பனவுகளை நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் காரணமாக அரச பல்கலைக்கழக அமைப்பில் பாரிய தொழில்சார் பிரச்சினை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: