ஏழு மாதங்களில் இடம்பெற்ற கொலைகள்!

Friday, August 17th, 2018

நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 282 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 28 பேர் துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் போது டி 56 ரக 16 துப்பாக்கிகளும், 35 ஆயிரம் தோட்டக்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளில் 711 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 779 கொள்ளை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: