கற்கோவளம் பாடசாலை அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்!

Wednesday, February 20th, 2019

வடமராட்சி வலயத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள யா.கற்கோவளம் மெ.மி.த.க பாடசாலையின் (வகை-11) அதிபர் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கீழ்வரும் தகைமையுடைய அதிபர்கள் குறித்த பாடசாலைக்கான அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரிகள் பின்வரும் தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

1.             இலங்கை அதிபர் சேவையில் தரம் 2, 3 தரமுடையவர்களாக இருத்தல் வேண்டும்.

2.             இலங்கை அதிபர் சேவையில் அதிபராகக் கடமையாற்றாதவர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். (இவர்களுக்கு பிரிவு 4 பொருத்தமாகாது)

3.             வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நிரந்தரமாக சேவையாற்றுபவர்களாக இருத்தல் வேண்டும்.

4.             விண்ணப்பதாரி தற்போது கடமையாற்றும் பாடசாலையில் ஆகக் குறைந்தது மூன்று வருடங்கள் தொடர்ச்சியான சேவையினை ஆற்றியிருத்தல் வேண்டும்.

5.             விண்ணப்பதாரி ஆகக் குறைந்தது மூன்று வருடங்களுக்கு கடமையாற்றக்கூடிய வயதெல்லையை உடையவராக இருத்தல் வேண்டும்.

6.             இலங்கை அதிபர் சேவை தரம் 2 ஐச் சேர்ந்தவர்களது பொருத்தமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் மாத்திரம் தரம் 3 ஐச் சேர்ந்தவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

7.             விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 01.03.2019 ஆகும்.

8.             விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு தோற்றுதல் வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி நிர்வாகப் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும் என வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.பார்த்தீபன் அறிவித்துள்ளார்.

Related posts:


சுகாதார தரப்பினரின் விதிகளை பின்பற்றி மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் முன்னெட...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
ஜனாதிபதி ரணில் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் – யாழ் கலாசார நிலையம் மக்கள் பாவனைக்காக நாளையதினம் கைய...