கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்தனர்!
Monday, November 7th, 2022
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்துள்ளனர்.
நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர்.
இந்தநிலையில், 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழில் வீடொன்றில் பெருமளவு போதைப்பொருள்கள் மீட்பு!
வடமராட்சியில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்...
|
|
|


