கண்டி புகையிரத நிலைய வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வு.
Friday, October 29th, 2021கண்டி ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து கண்டி புகையிரத நிலையம் வரையான வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்யும் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் இடம்பெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் ஆயிரத்து 290.5 மில்லியன் ரூபா செலவில் இந்த வீதி அபிவிருத்தி செய்யப்படுகிறது. இந்த வீதியின் நீளம் 2.1 கி.மீ களாகும்.
இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, திலும் அமுனுகம, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Related posts:
மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது - மஹிந்த தேசப்பிரிய!
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் – இராணுவத் தளபத...
சுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு - அமைச்ச...
|
|