கட்டாக் காலிகளால் அழிவடையும் நெற்பயிர்கள்!
Thursday, October 5th, 2017
நவாலி வடக்கு, தெற்கு விவசாயக் காணிகளில் கட்டாக்காலி மாடுகளால் அழிவு ஏற்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போது நெற்பயிர்கள் இரண்டு மூன்று இலைகள் துளிர்விட்டுள்ள நிலையில் கட்டாக்காலி மாடுகள் அங்கு மேய வருவதால் அழிவு ஏற்படுகின்றது.
“மாடுகளை மேய விட வேண்டாம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என ஒலிபெருக்கி மூலம் அறிவித்த நிலையிலும் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை காணப்படுகின்றதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிப்பு!
4 ஆம் திகதி கூடுகின்றது அரசிலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்க்கும் ஆலோசனை குழு...
அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீதான இணையவழி தாக்குதல் - விசாரணைகளை ஆரம்பதித்ததுர் குற்றப் ப...
|
|
|


