கட்டணத்தை குறைக்காத பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பேருந்து பயணக்கட்டணங்கள் குறைக்காத பேருந்துகள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் புதிய பேருந்து பயணக்கட்டணங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , தொடர்ந்தும் பழைய விலைக்கே கட்டணங்களை அறவிடும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் துசித குலரத்த தெரிவித்துள்ளார்.
பழைய விலைக்கு பேருந்து கட்டணங்களை அறவிடும் பேருந்துகள் தொடர்பில் 0112 860 860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
முன்பள்ளிகள் எந்தத் திணைக்களத்தின் கீழ் இயங்குகிறது என்பதைக் கூட உறுதிப்படுத்த தகுதியற்ற அவல நிலையே ...
ஸ்ரீலங்கா சுத்ந்திரக் கட்சி அதிரடி- தென்னிலங்கை அரசியலில் பதற்றம்!
கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து உரிமம் பெறும் நடைமுறை மறு அறிவித்தல்வரை நீக்கம் - புவ...
|
|