கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து உரிமம் பெறும் நடைமுறை மறு அறிவித்தல்வரை நீக்கம் – புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அறிவிப்பு!
Friday, June 12th, 2020மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து உரிமம் பெறும் நடைமுறை மறு அறிவித்தல்வரை நீக்கப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வால்போல தெரிவித்துள்ளார்.
ஜூன் முதலாம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல்வரை மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து உரிமம் தேவையற்றது என்று சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, தகவல் அளித்ததாக புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வால்போல தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுதொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அனுர வால்போல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நஞ்சற்ற சேதன உணவு உற்பத்தித் திட்டத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 530 பயனாளிகள் தெரிவு!
நல்லாட்சி அரசு கோவில் உண்டியலுக்கும் வரி விதிக்கும் - மகிந்த குற்றச்சாட்டு!
அரச வங்கிக் கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடிய எத்தகைய சூழ்நிலையும் நாட்டில் காணப்படவில்லை - அரச வங்...
|
|