கட்சித் தலைவர்களுடனான விசேட கூட்டம் சபாநாயகர் தலைமையில் !

Wednesday, December 5th, 2018

கட்சித் தலைவர்களின் விசேடக் கூட்டம் ஒன்று இன்று காலை 9.30க்கு சபாநாயகர் கருஜெயசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இன்றைய நாடாளுமன்ற அமர்வின் செயற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், நாடாளுமன்றில் ஆசன ஒதுக்கீடு எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் கேள்வி எழுந்தது.

எனினும் முன்னைய அமர்வின் போது ஒதுக்கப்பட்டப்படியே இன்றைய அமர்வுக்கான ஆசன ஒதுக்கமும் அமையும் என்று நாடாளுமன்றத்தின் படைக்கலங்களின் சேவிதர் தெரிவித்தள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, சபையின் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் மற்றும் விசேடவிருந்தினர் கூடம் என்பன மூடப்பட்டிருக்கும் என்று சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

எது எவ்வாறாயினும் இன்றைய நாடாளுமன்ற அமர்வினையும் தாங்கள் புறக்கணிக்கவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: