கடும் வெப்பநிலை காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு – எச்சரிக்கிறது சுகாதாரத் துறை!

Saturday, April 6th, 2019

இன்று முதல் அடுத்து வரும் இரு நாட்களுக்கு வரப் போகும் பாரிய ஆபத்து! பொதுமக்களே ஜாக்கிரதை

இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாட்டின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

வடமேல் மாகாணத்திலும், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், அநுராதபுரம், மொனராகலை மற்றும் கம்பஹா முதலான மாவட்டங்களில் இவ்வாறு அதிக வெப்பமான வானிலை நிலவக் கூடும் என குறித்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் 33 செல்சியஸ் அளவில் அதிக வெப்பநிலை பதிவாகியிருந்தது.

இந்த வெப்பமான வானிலை காரணமாக ‘இன்புளுவன்சா – ஏ’ உட்பட வைரஸ் காய்ச்சல்களும், சரும நோய்களும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய நாட்களில் இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுப்பதால் பொதுமக்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்படும் நிலைமை உள்ளதாக சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குறிப்பாக குழந்தைகள், பெரியோர்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன.

சரும நோய்கள், காய்ச்சல் மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட வைரஸ் தாக்கம் ஏற்படும் நிலைமை உள்ளது. எனவே, பொதுக்கள் தற்போதைய வெப்பமான வானிலை நிலைமையின் காரணமாக அதிகளவு நீரை அருந்துவதுடன், ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் நீராடுவதன் ஊடாக சரும நோய்த் தாக்கங்களைத் தவிர்க்க முடியும்.

அத்துடன், பாதுகாப்பான உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் தொற்று நோய்களை தவிர்க்க முடியும் என்று சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: