கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில் புதிய நேர அட்டவணை – புகையிரத திணைக்களம் தெரிவிப்பு!
Friday, October 14th, 2022
கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில் புதிய நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அட்டணை எதிர்காலத்தில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வீதி திருத்தப் பணிகள் தாமதமானால் புகையிரதங்களை இயக்குவதில் தாமதம் தொடரலாம் என புகையிரத திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலைமையை கருத்திற் கொண்டு கரையோரப் பாதையில் புகையிரதங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிரதமரது செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
பொலித்தீன், லன்ச்ஷீட் உற்பத்தி - விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா அபராதம் - சுற்றாடல் அமைச்சு!
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது!
|
|
|


