கடற்படைத் தளபதி – விமானப்படைத்தளபதி சந்திப்பு!
Thursday, August 31st, 2017கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
விமானப்படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் புதிய கடற்படைத் தளபதிக்கு விமானப்படை தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் எதிர்கால நடவடிக்கைகளின் போது விமானப்படையின் விரிவாக்கப்பட்ட ஆதரவு கடற்படைக்கு வழங்கப்படும் என்பதையும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பினை நினைவுகூறும் வகையில் இரு தரப்பிற்கும் இடையேயான நட்பு மற்றும் நல்லுறவை குறித்து நினைவுச் சின்னங்களும் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.
Related posts:
பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளது கொழும்புத் துறைமுகம்!
பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவதே வேலை நிறுத்தங்களின் நோக்கம் – உணர்ந்து செயற்படுமாறு அன...
நுகர்வோர் விவகார அதிகார சபையினர் நாடளாவிய ரீதியில் அதிரடி சோதனை – பல்வேறு முறைகேடுகள் கண்டறிவு!
|
|