கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு
Tuesday, April 19th, 2016
அகுரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 18.04.2016 அன்று மாலை திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அகுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த உத்தியோகத்தர் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் சேவைக்கு வருகை தந்துள்ள முதலாவது நாளிலேயே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வீரரத்ன எனும் பெயரையுடைய இவர், திடீரென ஏற்பட்ட இருதய நோயின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 27 வருடங்கள் பொலிஸில் சேவையாற்றியுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
கொவிட் நோயாளர்கள் குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிமுகம்!
கருப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகள் நீக்கம் - நாளைமுதல் நாட்டுள்குள் பிரவேசிக்க அ...
அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் உத்தியோகபூர்வ வி{யமாக இலங்கை வருகை!
|
|
|


