பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

Thursday, March 18th, 2021

பிரதமர் இம்ரான் கான் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமையைத் தொடர்ந்து இருதரப்பு உறவை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டாக்கை சந்தித்துள்ளார்.

பாகிஸ்தான் நன்கொடையாக வழங்கிய நடமாடும் நூலகங்களை அமைத்தல் மற்றும் இலங்கை மாணவர்களுக்கு மேலதிகமான நூறு மருத்துவ புலமைப் பரிசில்களை வழங்குதல் உள்ளிட்ட பிரதமர் இம்ரான் கானின் விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது ஒப்புக்கொண்டனர்.

அத்துடன் இலங்கையர்களுக்காக பௌத்த யாத்ரீக இடங்களைத் திறப்பதற்கான பாகிஸ்தானின் சலுகையை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, பாகிஸ்தான் இலங்கைத் பிரயாணத் துறை சலுகைகளை இலங்கை சுற்றுலாவுடன் சேர்ந்து விமானத் துறை விரைவில் அறிவிக்கும் எனத் தெரிவித்தார்.

அதேநேரம் மார்ச் 23 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் பாகிஸ்தான் தேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் குணவர்தனவுக்கு உயர் ஸ்தானிகர் கட்டாக் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: