கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஒக்டோபருக்குள் நிறைவுசெய்யப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்பார்ப்பு!
Sunday, May 28th, 2023கடன் மறுசீரமைப்பு தொடர்பில், கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவுசெய்ய விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அந்த நாட்டின் ஊடகமொன்றுக்கு நேற்று கருத்து வெளியிட்டபோது இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம், பாதீட்டை முன்வைப்பதற்கு முன்னர் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள், கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய விரும்புவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதில் அனைவரும் இணைய வேண்டும் எனத் தாங்கள் முன்மொழிவதாக ஜனாதிபதி கூறியுள்ளதுடன், சீனாவும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் ஜப்பானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உயர்தரப் பரீட்சை குறித்து எந்தவொரு மாணவரும் குழப்பமடையத் தேவையில்லை - கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும...
வாகனங்களின் தொழில்நுட்ட பிழைகளைக் கண்டறிய விஷேட நடவடிக்கை!
ரணில் விக்ரமசிங்கவை விட பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் எம்மிடம் இல்லை - அமைச்சர் நிமல் சிறிபால டி சி...
|
|