கடந்த 24 மணி நேரத்தில் 42 கொவிட் மரணங்கள் – நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1400 ஐ கடந்தது!

Sunday, May 30th, 2021

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அயிரத்து 400 ஐக் கடந்துள்ளது.

அத்துடன் கடந்த 24 அணிநேரத்தில்  42 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்த நாட்டில் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் பயணித்த 42 பேரில் கண்டி, சிலாபம், பலாங்கொடை, மஸ்கெலியா, யாழ்ப்பாணம், தர்காநகர், பதுளை, ஊவா பரணகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவைதவிர ஹொரணை, பொகவந்தலாவை ஆகிய பகுதிகளில் தலா 2 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. அதேநேரம் ஹற்றன், நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் தலா மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளன.

அதேநேரம் 35 வயது முதல் 93 வயதுக்கு இடைப்பட்டோரின் மரணங்களே இவ்வாறு பதிவாகியுள்ளன. அத்துடன் இவற்றில் 10 பேரின் மரணங்கள் வீட்டில் பதிவாகியுள்ளன.

குறித்த 42 மரணங்களில், பெரும்பாலானவை கொவிட் நியூமோனியாவினால் ஏற்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: