கடந்த ஒரு மாதத்தில் 337 பேர் விபத்துக்களில் சிக்கி சிகிச்சைபெற்றனர் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

Saturday, June 20th, 2020

யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 337 பேர் வீதி விபத்து, தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களிற்று உள்ளாகியுள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீதி விபத்திற்கு உள்ளான நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் மட்டும் வீதி விபத்தில் 212 பேரும், ஏனை விபத்தில் 118 பேரும், தீ விபத்தில் 7 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கடந்த 8 ஆம் திகதியில் இருந்து 14 ஆம் திகதி வரையில் வீதி விபத்தில் 43 பேரும், ஏனைய விபத்தில் 68 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் வீதி விபத்தில் காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: